விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, உடனடி அவசர சிகிச்சை ? சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, உடனடி அவசர சிகிச்சை வழங்குவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய, அரசு செயலர்கள் கூட்டத்தை கூட்டும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.வாகன விபத்து இழப்பீடு கோரி, போலியாக தாக்கலாகும் வழக்குகள் குறித்து ஆய்வு செய்து, பரிந்துரை அளிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, கே.சந்துரு தலைமையில், நிபுணர் குழுவை, உயர் நீதிமன்ற நீதிபதி, பி.என்.பிரகாஷ் நியமித்தார்.

இதையடுத்து, நீதிபதிசந்துரு குழு ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்து வருகிறது. இவ்வழக்கில், நீதிபதி, பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு:விபத்து வழக்குகளில் ஆஜராகும், ஏழு வழக்கறிஞர்களுக்கு எதிராக, போலீசில் புகார் அளிக்கலாம் என, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. வழக்கின் சூழ்நிலையை கருதி, ஏழு பேருக்கு எதிரான புகார், பார் கவுன்சிலின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது.
சட்டப்படி, பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பின், நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும். மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களில், ௫௬ வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போனது குறித்து, ஒரு மாதத்தில், விசாரணை அதிகாரி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.வாகன விபத்தில் சிக்குபவர்களுக்கு, உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டால், உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கு முறையான வழிமுறைகளை வகுக்கும்படியும், நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது.

எனவே, இந்தப் பிரச்னை குறித்து விவாதித்து, அறிக்கை தாக்கல் செய்யவும், வழிமுறைகளை வகுக்கவும், உள்துறை, நிதி, போக்கு வரத்து, சுகாதார துறைகளின் செயலர்கள், டி.ஜி.பி., உள்ளிட்டோர் அடங்கிய கூட்டத்துக்கு, அட்வகேட் ஜெனரல் ஏற்பாடு செய்ய வேண்டும்.விசாரணை, ஆக., ௧ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts:

தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் வெப் சீரிஸான 'தி கேம்: யு நெவர் பிளே அலோன்' நாளை (அக்டோபர் 2) ப்ரீமியர் ஆகிறது!

தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் !

கேம்பிரிட்ஜ் மாணவர்கள் வடிவமைத்த 'ஹெலியா' என்ற மின்சார கார்!

’நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

*மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!*

புதிய சங்கத்தின் மூலம் உதவி இயக்குனர்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் - சங்கத்தின் தலைவர் முஜீப்!

லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்' !