கோயில் நிலங்களில் வசிக்கும் 20 ஆயிரம் பேருக்கு பட்டா.?

தமிழகத்தில் உள்ள 4.78 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களில் 600 ஏக்கர் நிலங்கள் மட்டும் 20 ஆயிரம் ஏழை குடும்பத்தினருக்கு பட்டா வழங்க பயன்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி ராதா கிருஷ்ணன், சத்தியநாராயணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி, தமிழக வருவாய் துறை தரப்பில் கூடுதல் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்,பல ஆண்டுகளாக கோவில் நிலங்களில் வசித்தவர்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களில், 19 ஆயிரத்து 717 குடும்பங்கள் நீண்ட காலமாக ஆக்கிரமித்து வசித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள தமிழக அரசு, மாநிலம் முழுவதும் உள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்களில், 600 ஏக்கர் நிலங்கள் மட்டுமே ஏழைகளின் வீட்டு மனை பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பட்டா வழங்கும் போது கோவிலின் வருமானத்திற்கும், பூஜைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல், எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூடுதல் பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

அறநிலைய துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்த பிறகே, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆக்கிரமிப்பு நிலங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, பட்டா வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.கோவில் நிலத்தை எடுப்பதற்காக வழங்கப்படும் இழப்பீடு மற்றும் விலை ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயை தொகுப்பு நிதியாக வைத்து, கோவிலின் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளுக்கு பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி, வழக்கை தள்ளுப்படி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related posts:

சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் சட்டம் !
கூடுதல் லாபத்தை பெற 18000 பேரின் வேலையை காலி செய்யப் போகும் கார்ப்பரேட் !
குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றசா...
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா நிதியுதவி !
பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் போராட்டம் ?பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி!
வங்க கடலில் வருகிறது காற்றாலை மின் உற்பத்தி மையம் !
தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு ரோட்டரி கிளப் நிதியுதவி!
30 – 45 வயதுடையோருக்கு சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எது..!