கரும்பு ஜூஸ் ! சர்க்கரை நோயாளிகள்  குடிக்கலாமா?

தெருவோர கடைகள் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை பிரதானமானது. தாகம் தணிக்கவும், உடனடி ஆற்றல் பெறவும் எடுத்துகொள்ளும் இந்த சாறு உடலுக்கு தரும் நன்மைகள் ஏராளம். இனிப்பு நிறைந்த பொருள்கள் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் என்றால் அதில் கரும்பும் ஓன்று. உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களால் இது நிரப்பப்படுகிறது.

குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் கரும்புச்சாறுடன் இலேசான புளிப்புத்தன்மை கொண்ட எலுமிச்சைச்சாறும், வைட்டமின் சி நிறைந்த புதினா, மற்றும் இஞ்சியும் சேரும் போது அது சுவைக்கூட்டும் ஆற்றல் மிக்க அமிர்த பானமாக இருக்கும். ஒரு டம்ளர் கரும்புச்சாறு உடலுக்கு தரும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

இதன் ஊட்டச்சத்து அடர்த்தி அளவிடமுடியாதது. இதில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, மாங்கனீசு, பல்வேறு அமினோ அமிலங்கள்,துத்தநாகம், தயாமின் மற்றும் ரைஃபோப்ளேவின் போன்றவை அடங்கியுள்ளது.8 அவுன்ஸ் கொண்ட கரும்பு சாற்றில்180 கலோரிகளும், 30 கிராம் சர்க்கரையும் உள்ளது. இந்த சாறு நார்ச்சத்து கொண்டதும் கூட. இதில் உள்ள ஃப்ளவனாய்டுகள் மற்றும் பாலிபினோலிக் கலவைகள் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்க கூடியது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

கரும்புச்சாறு இனிப்பான பானம். இது பதப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் உயர் ப்ரக்டோஸ் சோளம் சிரப் நிரப்பிய பானங்கள் போல் அல்ல இயற்கையாகவே சர்க்கரைகள் வழங்கப்படுவதால் இது குடித்த பிறகு அந்த நாள் முழுக்க வலுவாக வைத்திருக்க செய்கிறது.

உடல் குளுக்கோஸ் வெளியீட்டை கட்டுப்படுத்தும் அளவு திடமான ஆற்றலை வழங்கும். உடல் சோர்வை தடுக்க உதவும் பானங்களில் இவை முக்கியமானது. கரும்பில் இருக்கும் சுக்ரோஸ் ஆனது உடலுக்கு சரியான நேரத்தில் ஆற்றலை வழங்குகிறது. உடலை மறுசீரமைக்கவும், சோர்வை மீட்டெடுக்கவும் இது சிறந்த தேர்வாகவும்.கரும்புச்சாறு உடலில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம்,பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு அளவை அதிகரிக்க செய்கிறது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இது எலும்புக்கு உறுதி அளிக்கிறது.

மிக முக்கியமாக எலும்பு தேய்மானத்தை உண்டு செய்யும் ஆஸ்டியோபொராசிஸ் அபாயத்தை தடுக்க செய்கிறது. குறிப்பாக பெண்களுக்கு. தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ் குடிப்பதன் மூலம் வயதானபிறகும் எலும்புகளை வலுவாக வைத்திருக்க செய்யும்.செரிமான அமைப்பை பராமரிக்கவும் சீராக்கவும் செய்கிறது. கரும்புச்சாறு பொட்டாசியம் கொண்டிருப்பதால் வயிற்று கோளாறுகளை தடுக்க செய்கிறது. இது நார்ச்சத்தும் கொண்டிருப்பதால் வயிற்றில் குடல் அழற்சியை தடுக்கவும், குணப்படுத்தவும் செய்கிறது.மலச்சிக்கல், வயிற்று கோளாறுகள், தசைப்பிடிப்பு, வீக்கம் போன்ற அறிகுறிகளை குறைக்க செய்கிறது. வயிறு புடைக்க சாப்பிட்ட பிறகு நீங்கள் ஒரு டம்ளர் கரும்புச்சாறு குடித்தால் செரிமானம் விரைவாகும்.

கரும்புச்சாறு பொட்டாசியம் நிறைந்தது என்பதால் இது உடலில் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் ஏற்படும் குறைபாட்டை போக்குகிறது. பதட்டட்தை தணிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை திறம்பட குறைக்கவும், பெருந்தமனி தடிப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாத அபாயத்தை குறைக்கவும் செய்கிறது. கரும்புச்சாறு குடிப்பதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் சீராக வைத்திருக்கலாம்.
​நோய் எதிர்ப்பு சக்தி

கரும்புச்சாற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் வைட்டமின் சி ஆனது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இது செரிமானக்கோளாறு, கல்லீரல் நோய், வயிறு, சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிரானது. இது வீக்கத்தை குறைக்க செய்கிறது.

கரும்புச்சாறில் இருக்கும் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் பிலிரூபன் அளவை நடுநிலையாக வைக்கும். கரும்புச்சாறு நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டவும் அதிகரிக்கவும் செய்யும்.கரும்புச்சாறு குடிப்பதால் அது உடலில் உள்ள எல்டிஎல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைகள் போன்ற இரண்டு கொழுப்பின் அளவை குறைக்க செய்கிறது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளது. கெட்ட கொழுப்புகள் குறைந்தால் உடலில் பலவிதமான குறைபாடுகள் உண்டாகாமல் தடுக்கலாம். இது இதயக்கோளாறுகள் வராமல் பாதுகாக்கும். உடலில் கொழுப்பை குறைக்க கரும்பு ஜூஸ் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.​

கரும்புச்சாற்றில் இருக்கும் சில அமினோ அமிலங்கள், டிரிப்டோன் மற்றும் மெக்னீசியம் மன அழுத்த ஹார்மோன் அளவை சமப்படுத்த செய்கிறது. இது தூக்கமின்மையை பிரச்சனையை சரிசெய்வதோடு ஆழ்ந்த தூக்கத்துக்கும் உதவக்கூடும்.தூக்கமின்மை அல்லது தூக்கத்தை குறுக்கீடு செய்யும் நிலை உங்களுக்கு இருந்தால் அதை களைய நீங்கள் கரும்புச்சாறை எடுத்து கொள்ளலாம். கரும்புச்சாறு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை கொண்டுள்ளது. கரும்புச்சாறு குடிப்பதன் மூலம் பற்களின் பற்சிப்பினை பாதுகாக்க செய்கிறது. இது பற்களை பலப்படுத்த உதவுகிறது. பல் சிதைவிலிருந்து அதை பாதுகாக்க செய்கிறது.இது அதிக ஊட்டச்ச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது என்பதால் ஊட்டச்சது குறைபாட்டால் உண்டாகும் வாய் துர்நாற்றத்தை எதிர்த்து போராடுகிறது.

கரும்புச்சாறு இனிப்பு மிகுந்தது என்றாலும் இது குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டுள்ளது. இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யகூடிய இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், கர்ப்பகாலத்தில் காலை நோய் அறிகுறிகளை குறைக்கவும் இது உதவுகிறது.கர்ப்பகாலத்தில் கரும்புச்சாறு எடுத்துகொள்வதன் மூலம் அவர்களை சோர்வில்லாமல் புத்துணர்ச்சியாக சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். உடலுக்கு ஆற்றல் வழங்க கூடிய கரும்புச்சாறு கர்ப்பிணிகளுக்கு நன்மை செய்கிறது.

கரும்புச்சாறில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு இது கொழுப்புடனும் இணைக்கப்பட்டுள்ளது. உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்க செய்கிறது. கரும்புச்சாறு வயிற்றை நிறைவாக வைத்திருப்பதால் சிற்றுண்டி உணர்வோ பசி உணர்வோ இருக்காது. செரிமான ஆரோக்கியம் நார்ச்சத்தால் அதிகரிக்க கூடும். குடல் ஊட்டச்சத்தை உறிஞ்சுக்கொள்ளும் வகையில் அதன் செயல்திறனை மேம்படுத்துகிறது.கரும்புச்சாறின் காரத்தன்மை அதிகப்படியான அமில கொழுப்பை எரிக்க அதற்கான செயல்திறனை ஊக்குவிக்கிறது. இதில் இருக்கும் இயற்கை சர்க்கரை உடலுக்கு ஆற்றல் மூலத்தையும், அதிக கலோரிகளையும் எரிக்க தூண்டுகிறது.​

இது குறைந்த கிளைசெமிக் பண்புகளை கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் செயற்கை பானம் அல்லது சோடாவை காட்டிலும் இதை குடிக்கலாம். இதில் இயற்கை சர்க்கரை அடங்கியுள்ளதால் சர்க்கரை உடலில் மெதுவாக உறிஞ்சப்படுகிறது. உயர் கிளைசெமிக் பானங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது டைப் 2 சர்க்கரை நோயாளிகள் கரும்புச்சாறை மிதமான அளவில் எடுத்துகொள்ளும் போது அது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.​