கொரோனாவால் தாக்கப்பட்டுள்ள முதல் 50 நாடுகளை ஆய்வு செய்ததில், இந்த தடுப்பூசி காலாகாலமாக பயன்படுத்திவரும் நாடுகளில் கொரோனாவால் இறப்பு வீதம் மிகவும் குறைவாக காணப்பட்டது என்ற உண்மை வெளியானது.அதுவும் சுமார் 6 மடங்கு அளவுக்கு கொரோனா தாக்கம் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்திவரும் நாடுகளில் குறைவாக காணப்பட்டுள்ளது.
தற்போது அதே பி.சி.ஜி தடுப்பூசியை மீண்டும் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்த முடியுமா என்ற ஆய்வில் இறங்கியுள்ளனர் ஆய்வாளர்கள்.கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் 4,000 சுகாதார ஊழியர்களுக்கு பி.சி.ஜி தடுப்பூசி அளிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வில் சாதகமான முடிவு வரும் என்றே ஆய்வாளர்கள் தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
