ஊரடங்கு உத்தரவுக்கும் 144 தடை உத்தரவுக்கும் என்ன வேறுபாடு?

சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டும் காலங்களில் தேவைக்கு ஏற்ப ஊரடங்கு உத்தரவை இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி அரசு காவல்துறை மூலம் அமல்படுத்தும். 144 தடை உத்தரவின் நீடித்த நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை குறிப்பிடலாம். இந்த இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்றாலும், சூழ்நிலை, நேரம், காலத்துக்கு தக்கவாறு நடவடிக்கையின் தன்மை அமையும்.

ஊரடங்கு உத்தரவு என்றால் என்ன?
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144-இன் விரிவாக்கம் அல்லது விரிவான நடவடிக்கையே ஊரடங்கு உத்தரவாகும்.அசாதாரணமான சூழ்நிலைகளில் பதற்றத்தை தணிக்க முடியாத நிலை எழும்போது, மாநில அரசு அல்லது மத்திய அரசு ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதி அல்லது மாவட்டம் அல்லது மாநிலங்கள் அல்லது நாடு முழுவதும் என்ற அளவில் மக்களின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும். மாவட்ட நிர்வாகம், காவல்துறை மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.இனம் அல்லது சமுதாயம், ஜாதி கலவரங்கள், வன்முறை, சட்ட எதிர்ப்பு, நோய் பரவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான தேவையின்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இந்தியாவின் பரபரப்பான சாலைகள் இன்று எப்படி இருந்தன தெரியுமா?ஊரடங்கு உத்தரவை மாவட்ட நிர்வாக தலைவரான மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு நிர்வாகம் – அமைதியை நிலைநாட்ட முடியாத சூழலில் பயன்படுத்தும்.மக்களின் எவ்வித நடமாட்டத்தையோ, கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள் போன்றவை செயல்பட அனுமதி மறுக்கப்படும். அத்தியாவசிய சேவைகளான காவல்துறை, அவசர ஊர்தி வாகனங்கள், தீயணைப்புத்துறை, மருத்துவ சேவைகள் ஆகியவை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும்.

ஊரடங்கு காலத்தில் உண்ணாவிரதம், போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு அனுமதி கிடையாது.முக்கிய நபர்களை தடுத்து வைக்கவும், சந்தேக நபர்களை கைது செய்யவும் இந்த நடவடிக்கை வழிவகுக்கும்.ஊரடங்கு உத்தரவு, குறிப்பிட்ட காலத்திலிருந்து எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் நீட்டிக்கப்படலாம். அதற்கு நியாயமான காரணங்களை அரசு தரப்பு கொண்டிருக்க வேண்டும். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் குடிமக்களுக்கு சட்ட உரிமை உண்டு.

Related posts: