ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ், நாசர், காளி வெங்கட் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 4 வருடங்களுக்கு பின் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இத்திரைப்படம் வெளிவந்துள்ளது.இதனாலேயே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
தனது தாய் பூர்ணிமா பாக்கியராஜ், தந்தை நாசருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ருத்ரன் {ராகவா லாரன்ஸ்}. குறிப்பாக தனது தாயின் மீது அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார். இந்த சமயத்தில் கதாநாயகி பிரியா பவானி ஷங்கரை சந்திக்கும் ருத்ரன் காதலில் விழுகிறார். இந்த காதல் திருமணம் வரை செல்லும் நேரத்தில், ருத்ரனின் தந்தைக்கு பிரச்சனை வருகிறது.தனது நண்பனை நம்பி 6 கோடி கடன் வாங்கினார் நாசர். ஆனால், அவர் நாசரை ஏமாற்றிவிட்டு 6 கோடி பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார். கடன் கொடுக்க முடியாமல் நண்பனின் துரோகத்தை தாங்க முடியாமல் மரணடைகிறார்.
நாசரின் மரணத்திற்கு பின், வாங்கிய 6 கோடி கடனை வட்டியுடன் 7 கோடியாக திருப்பி கொடுக்க வேண்டுமென கடன் கொடுத்தவர் கேட்க, தந்தையின் டிராவல்ஸ் நிறுவனத்தை விற்று 3 கோடி ரூபாய்யை முதலில் கொடுக்கிறார் ருத்ரன். பின் மீதமுள்ள 4 கோடி கடனை அடைக்க அதிக சம்பளம் கிடைக்கும் வெளிநாட்டு வேலைக்கு செல்கிறார்.
இதற்கிடையில் பிரியா பவானி ஷங்கரை திருமணம் செய்யும் ருத்ரன் தனது தாய் மற்றும் மனைவியை விட்டு பிரிந்து வெளிநாட்டிற்கு செல்கிறார். 6 வருடங்களுக்கு பின், சென்னைக்கு மீண்டும் வருவதற்கு 3 மாதங்கள் இருக்கும் நிலையில் ருத்ரனின் தாய் மரணமடைகிறார். மனைவி பிரியா பவானி ஷங்கர் காணாமல் போகிறார்.குடும்பம், காதல், வேலை என மகிழ்ச்சியாக வாழும் ருத்ரனின் குடும்பத்தின் மேல் ஒரு பெரிய கடன் வந்து விழ, அதிலிருந்து மீள வெளிநாட்டில் ஐடி வேலைக்குச் செல்கிறார் ருத்ரன். அதனாலேயே, ருத்ரனின் மொத்த குடும்பமும் வில்லன் ‘பூமி’யால் கொல்லப்படுகிறது. வில்லன் பூமி யார், அவர் ஏன் ருத்ரனின் குடும்பத்தைக் கொன்றார், பூமியை ருத்ரன் பழிவாங்கினாரா என்பதை எளிதில் யூகிக்கும்படியான மசாலா சினிமா டெம்ப்ளேட் காட்சிகளை வரிசையாக அடுக்கி, திரைக்கதை அமைத்திருக்கிறார் கே.பி.திருமாறன், அதற்குத் திரையில் உயிர் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கதிரேசன்.
ஹீரோவாக வரும் ராகவா லாரன்ஸ் ஆக்ஷன், காதல், பாசம், செண்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும் சூப்பராக நடித்துள்ளார். குறிப்பாக செண்டிமெண்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். ராகவா லாரன்ஸ் தாயாக நடித்துள்ள பூர்ணிமா பாக்கியராஜின் நடிப்பு படத்திற்கு பலம்.
மனைவியாக வரும் பிரியா பவானி ஷங்கர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்ளார். முழுமையான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமாரின் நடிப்பு மிரட்டல்.துறைமுக தாதாவாகவும், கொலைகார கும்பலின் தலைவனாகவும் வருகிறார் சரத்குமார். தோற்றம், உடல்மொழி போன்றவற்றில் மிரட்டினாலும், வழக்கமான வில்லன் கதாபாத்திரம் செய்யும் அதே பன்ச் டையலாக், அதே மிரட்டல், அதே கோபம் எனப் படம் முழுவதும் மாற்றங்களின்றி வருகிறார். மற்றபடி அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார்கள்.
முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு வாழ்த்துக்கள். எடுத்துக்கொண்ட கதைக்களம், சொல்ல வந்த கருத்து இரண்டையும் சிறப்பாக செய்துள்ளார். ஆனால், திரைக்கதையில் சற்று சொதப்பிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.
நம்பவே முடியாத ஆக்ஷன் காட்சிகள், ஓவர் மசாலா, பார்த்து பார்த்து சலித்துப்போன பழிவாங்கும் கதை என கமெர்ஷியல் விஷயங்கள் தான் படத்தில் நிரம்பி இருக்கிறது. ஆனால், தாய் தந்தையை தனியாக விட்டுவிடாதீர்கள் என கதிரேசன் சொல்ல வந்த கருத்து, இன்றைய காலகட்டத்தில் தேவைப்படும் விஷயமாக இருக்கிறது. அதற்கு பாராட்டுக்கள்.
முதல் பாதி சற்று தொய்வாக இருந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி செம மாஸ்.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே சூப்பர். குறிப்பாக கிளைமாக்ஸ் பாடல் வெறித்தனமாக இருந்தது. ஒளிப்பதிவு கலர்ஃபுல். எடிட்டிங் ஓகே. ஸ்டண்ட் இன்னும் கூட மசாலாவை குறைத்திருக்கலாம். எளிதில் யூகிக்கும்படியான திருப்பங்கள், லாஜிக் மீறல்கள் எனப் போய்க்கொண்டிருக்கும் திரைக்கதையில், ராகவா லாரன்ஸின் துக்கத்தையும், பதற்றத்தையும் கடத்தும் காட்சிகள் மட்டும் கொஞ்சம் ஆறுதல் தருகின்றன. அதிரடி சண்டைக்காட்சிகளுக்குப் பின் வலுக்கட்டாயமாக இறுதியில் சேர்க்கப்பட்ட உருக்கமான காட்சிகள், பலவீனமான திரைக்கதைக்கு கைகொடுக்கும் என இயக்குநர் நம்பியிருக்கிறார். ஆனால், அது மொத்த படத்திலிருந்தும் விலகி, துருத்தலாகவே நிற்கிறது. சண்டைக் காட்சிகளில் இயற்பியல் விதிகள் மட்டுமல்ல, பல விதிகள் மீறப்பட்டு ஃபேன்டஸி படங்களுக்கே டஃப் கொடுக்கிறது.