மீண்டும் டப்பிங் யூனியன் தலைவரானார் நடிகர் ராதாரவி!

சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டது ராதாரவி – சின்மயி மோதலுக்கு வழி வகுத்தது.இதனால் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் சின்மயி. இதையடுத்து டப்பிங் சங்கத்தின் தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு மீண்டும் ராதாரவி போட்டியிட அவரை எதிர்த்து ராமராஜ்யம் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சின்மயி போட்டியிடுவதாக அறிவித்து சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் யூனியன் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பாடகி சின்மயி தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. சங்கத்தின் விதிமுறைக்குட்பட்டு வேட்புமனு தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் ராதாரவி டப்பிங் யூனியன் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.