புதிய வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட் !

ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் டிஜிட்டர் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட உள்ளன. இதனால் இவற்றை பதிவு செய்வது தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் பொருத்துவதை நடைமுறைப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகளில் ‘பார்க்கோடு’ இடம் பெற்றிருக்கும். பார்கோடை ஸ்கேன் செய்து பார்த்தால் வாகன உரிமையாளர் பெயர், முகவரி, எஞ்சின் மற்றும் சேசிஸ் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் இந்த வகை நம்பர் பிளேட்டுகளை நடைமுறைப்படுத்தும்போது வாகனங்களை திருடி ஒரே எண்ணை பல வாகனங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்க முடியும்.

மேலும் திருட்டு வாகனங்களை மீட்பது, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்பவர்களை பிடிப்பது ஆகியவற்றுக்கும் இத்தகைய நம்பர் பிளேட்டுகள் உதவும்.எனவே, ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் பொறுத்துவது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நிலையில் தற்போது அதனை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படாத நிலையில் ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களுக்கான பதிவு தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் நிறுத்திவைக்கப் பட்டுள்ளன. அதற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களின் பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

Related posts:

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'கண்ணே கலைமானே' இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது!

’மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

அஃப்ரிஞ்ச் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் அறிமுக இயக்குநர் ஜாபர் இயக்கத்தில், ‘விடாமுயற்சி’ புகழ் கணேஷ் சரவணன் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது!

கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் பல நன்மைகள் உள்ளது.!

'அசம்பாவிதம் நடந்தால் தான் அரசு விழிக்குமா ? சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி கேள்வி ?

’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தில் பணிபுரிவது ஒரு அரிய வாய்ப்பு!” நடிகர் நாசர்!

’படையாண்ட மாவீரா’-- விமர்சனம் !

'அந்தகன்' பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா.!