எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் இயங்கும் விழி ஒளி பரிசோதகர் பயிற்சி பள்ளியின் 60ஆம் ஆண்டு விழா மற்றும் உலக விழி ஒளி ஆய்வாளர் தினம் சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மருத்துவ கல்வி இயக்குனர் மரு.R.சாந்தி மலர் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசும்போது:- இந்த பயிற்சிப் பள்ளி 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது.எழும்பூர் கண்மருத்துவமனை இயக்குநராக இருந்த RGS முத்தையா அவர்கள்பிரைமரி ஹெல்த் கேர் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த பயிற்சிப் பள்ளியைத் துவக்கினார். என்றும் ஆரம்பத்தில் டிப்ளமா இன் ஆத்தால்மாலஜியாகத் தொடங்கி பின்னர் பிஎஸ்சி ஆப்தாலமாலாஜியாக விரிவு செய்ய படுத்தப்பட்டது.தற்போது எம்எஸ்சி ஆப்தாலமாலஜியாக ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார் . ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை கல்லூரி டீன் மரு.E.தேரணிராஜன், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் மரு.M.R.சித்ரா மற்றும் விழி ஒளி பரிசோதக பயிற்சி பள்ளி மருத்துவ அதிகாரி மரு.M. ஹேமா நந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வினை விழி ஒளி பரிசோதகர் பயிற்சி பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் 500 க்கும் மேற்பட்ட விழி ஒளி பரிசோதகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.விழி ஒளி பரிசோதகர் பயிற்சி பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு தினேஷ்.கே.ஷா மற்றும் செயலாளர் திரு.E. சந்திரசேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related posts:

இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

'டிரான்: ஏரஸ்' படத்தில் நடித்துள்ள ஜாரெட் லெட்டோ தனது ஹீரோ ஜெஃப் பிரிட்ஜஸ் பற்றி சிலாகிக்கிறார்!

’அருள்வான்’-- திரைப்பட விமர்சனம்!

வசூல்ராஜா வான சுந்தர் சி யின் "மதகஜராஜா"! பட அதிபர் கே.ஆர் அறிக்கை!!

போர்ட்டர் இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை பெறுவதற்கும் தடையற்ற போக்குவரத்துக்கும் இன்டர்சிட்டி கூரியர் சேவையை தொடங்குகிறது!

”’ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் எனது கனவு” நடிகர் ருத்ரா!

விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா, ருக்ஷார் தில்லானின் பிக் பட்ஜெட் சைக்காலஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் 'ஸ்பார்க் எல்.ஐ.எஃப்.இ' நவம்பர் 17ஆம் தேதி இந்தியா முழ...