40 ஆண்டுகளுக்கு பின் நடிகைக்கு சம்பள பாக்கியை திருப்பி கொடுத்த தயாரிப்பாளர்!

நடிகை ஊர்வசி சாரதா பழம்பெரும் நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் துலாபாரம், ஞான ஒளி, என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.தயாரிப்பாளர் வி.வி.ஆண்டனி, 1979-ம் ஆண்டு புஷ்யராகம் என்ற பெயரில் மலையாளப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இந்த படம் வெளியாகி அவர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இந்த படத்தில் நடித்த நடிகை ஊர்வசி சாரதாவுக்கு பேசிய சம்பளத்தை கொடுக்காமல், குறிப்பிட்ட தொகையை மட்டுமே கொடுத்துள்ளார்.

அதன் பின் வி.வி.ஆண்டனி எடுத்த படங்கள் பெரிய அளவில்வெற்றியை பெறாத நிலையில், சாரதாவுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை அவரால் கொடுக்க முடியாமலே போய்விட்டது. 40 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், வி.வி.ஆண்டனி தனது பிள்ளைகளின் பொருளாத நிலை உயர்ந்ததையடுத்து, சாராதாவுக்கு சம்பளபாக்கியை கொடுத்துவிட விரும்பியுள்ளார்.இந்நிலையில், நடிகை ஊர்வசி சாரதா, சினிமா விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கொச்சி டவுன் ஹாலுக்கு வருவதாக தயாரிப்பாளர் ஆண்டனிக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை விட கூடுதலாக ஒரு தொகையை எடுத்துக்கொண்டு அந்த விழாவுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், விழாவுக்கு இடையே நடிகை சாராதவை சந்தித்து, வி.வி.ஆண்டனி அவருக்கு கொடுப்பதற்காக எடுத்து வந்திருந்த பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். 40 ஆண்டுகள் கடந்த நிலையில், கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை மறக்காமல் திருப்பி கொடுத்ததில், ஆண்டனி காட்டிய நேர்மை, நடிகை சாரதாவுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இருவரும் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு பிரிந்து சென்றனர்.

Related posts:

நடிகர் சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'இங்க நான் தான் கிங்கு' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு
'சூது கவ்வும் 2' படத்திலிருந்து பட்டையைக் கிளப்பும் 'சூரு' பாடல் வெளியீடு !
ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிலும் மாணவர்களுக்கு தங்குமிடத்துடன் இலவச பயிற்சி !
தயாரிப்பாளர்,விநியோகஸ்தரான ஜே எஸ் கே சதீஷ்குமார் நடிகராக அவதாரம் எடுக்கிறார் !
நிர்மலாவுக்கு எண்டு கார்டு.. ராஜ்ய சபா வழியாக.. நிதி அமைச்சர் ஆகும் "இன்னொரு" தமிழர்?
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் “ஹர்காரா” ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் !!
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது !