வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! புதிய அப்டேட்டுடன் 2020!

2020 ஆம் ஆண்டு துவங்கியுள்ள நிலையில் வாட்ஸ் ஆப் தனது பயனர்களுக்கு மூன்று புதிய அப்டேட்ஸ் கொண்டு வர உள்ளது.சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த ஆண்டிற்குள் 3 புதிய அப்டேட்டுகளை செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அந்த மூன்று அப்டேட்ஸ் என்னவெனில், வாட்ஸ் ஆப் டார்க் மோட், ஃபேஸ் அன்லாக், டெலிடெட் மெசெஜ்.
டார்க் மோட் வசதியை பெற என்பது வாட்ஸ் அப்பின் செட்டிங்க்ஸ் மெனுவில், டார்க் மோட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதை செலக்ட் செய்தால்,டார்க் மோட் வரும்.டெலிடெட் மெசெஜ் இது வாட்ஸ் ஆப் க்ரூப் சேட்டில் பயன்படும். ஒரு க்ரூப்பில் அட்மின் பதிவிடும் பதிவை, நேரம் குறிப்பிட்டு எப்போது வேண்டுமானாலும் டெலிட் செய்ய முடியும்.அதாவது, அனுப்பிய மெசேஜ், குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் தானாகவே மறையும் வகையில் இந்த அப்டேட் இருக்குமாம்.

ஃபேஸ் அன்லாக் அப்டேட் என்பது ஸ்மார்ட்போன்களில் செல்ஃபி மூலம் முகத்தை படம் பிடித்து, அதன்மூலம் போனை அன்லாக் செய்து கொள்ளும் முறை ஆகும்.