தினமும் நான்கு வேப்பிலை கொழுந்து உண்டு வந்தால் ஏற்படும் நன்மைகள்!

பொதுவாக வேப்பிலை மரம் நகரத்தில் பல இடங்களில் காணப்படும். எளிதாய் கிடைக்கும் இந்த வேப்பிலையில் பல நன்மைகள் உண்டு.தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆயுர் வேதத்தின் ஆணி வேறாக கருதப்படும் வேப்பிலையின் பயன்களை பற்றி தான் அறிந்து கொள்ளப்போகிறோம். இன்றைய கால கட்டத்தில் நோய்க்கு கட்டுப்பாடே கிடையாது. பல விதமான நோய்கள் பெயர் கூட தெரியாத நோய்கள் மக்களை வதைக்கிறது. இதற்கெல்லாம் மருந்து இருக்கிறதா இல்லையா என்பதே ஒரு பெரும் கேள்வியாக மக்களிடம் உள்ளது.ஆனால் நம் தமிழகத்தில் அனைத்திற்கும் தீர்வு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே கண்டு பிடிக்கப்பட்டது. அப்படி நம் முன்னோர்கள் கண்டறிந்த நோய் தீர்க்கும் மற்றும் நோயை அண்ட விடாத ஓர் இயற்கையின் அற்புதம் தான் வேப்பிலை கொழுந்து.

தினமும் நான்கு வேப்பிலை கொழுந்து உண்டு வந்தால் பெரும் நன்மைகள்!

வேப்பிலை கசாயம் கிருமிகளை கொன்று காய்ச்சலை குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.வயிற்றுப் புண்களை ஆற்றி, கிருமிகளை அழித்து வயிற்றை முற்றிலும் சுத்தப்படுத்தி அணைத்து பிரச்சனைகளையம் தீர்க்கக் கூடியது.வேப்பிலையை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அரைத்து தலைக்கு தேய்க்க பித்தத்தால் ஏற்படும் மயக்கம் சரியாகும்.சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கும் திறன் வேப்பங்காய்க்கு உள்ளது.
மயக்கம், குமட்டல், வாந்தி, போன்றவைக்கு எளிய தீர்வு வேப்பிலையில்.

உலகிலே அதிக அளவு எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு இருக்கிறது. நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிக்கும் திறன் இதன் சாறில் உள்ளது.பித்த வெடிப்பிற்கு வேப்பிலை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வந்தால் பித்தவெடிப்பு மற்றும் கால் பாதம் எரிச்சல் போன்றவை குணமடையும்.மலேரியா காய்ச்சல் குணமடையும் தினமும் காலை நேரத்தில் 10 வேப்பங்கொழுந்து எடுத்து அதனுடன் 5 மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்.வேப்பங்குச்சியால் தினந்தோறும் பல் துலக்கினால் பற்கள் வலிமை பெறும். ஈறுகள் பிரச்சனையையும் தீர்க்கும்.