ரயில்வே தனியார்மயம்.. 151 பயணிகள் ரயிலுக்கு விண்ணப்பம்.. சூடுபிடிக்கும் தனியார்மய நடவடிக்கை..!
இந்தியாவில் ஒரு புறம் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக அரசு பலவேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனாவிற்கு முன்பே, பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கான நடவடிக்கையில் அரசும் ஈடுபட்டு வந்த நிலையில் தான், கொரோனா வந்து குறுகிட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் நிதியைத் திரட்ட உள்ளது.இதன் படி இந்திய ரயில்வே துறை மத்திய asset monetisation திட்டத்திற்காகச் சுமார் 87 நிலங்களையும், 84 ரயில்வே காலனிகளையும், 4 மலை ரயில் சேவைகளையும், 3 ஸ்டேடியங்களையும் விற்பனை செய்ய ஏற்றது எனக் கண்டறிந்துள்ளது.
எனினும் தற்போது மீண்டும் தற்போது தனியார்மயம் என்னும் ஆயுதத்தினை மீண்டும் கையில் எடுத்துள்ளது. ரயில்வே அமைச்சம். தற்போது 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில், தகுதிவாய்ந்த நிறுவனங்கள் விண்ணப்பம் செய்வதற்காக ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் அறிக்கையின் படி, 109 ரயில்வே வழித்தடங்களில் 151 நவீன பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. முதல் முயற்சி இந்த தனியார் ரயில்களுக்கான 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று ரயில்வே துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்தான அறிக்கையில், இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான தனியார் முதலீட்டின் முதல் முயற்சி இதுவேயாகும் என்றும் தெரிவித்துள்ளது. ஐஆர்சிடிசி-க்கு கடந்த ஆண்டு அனுமதி கடந்த ஆண்டில் ஐஆர்சிடிசி ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. அதன் படி மூன்று ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 151 ரயில்கள் இயக்க அனுமதி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இந்த தனியார் ரயில்களில் குறைந்தபட்சம் 16 பெட்டிகள் இருக்க வேண்மென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மேற்கூறிய 109 வழித்தடங்களும் 10 – 12 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இது தான் இலக்கு இது குறித்து ரயில்வே தரப்பு, ரயில்வே துறையில் நவீன தொழில் நுட்பத்தினை கொண்டு வர வேண்டும். வேலைவாய்ப்பினை அதிகரிக்க வேண்டும். அதோடு உலகத்தரம் வாய்ந்த பயணத்தினை மக்களுக்கு வழங்கவேண்டும், பயணிகளின் பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தினை கையில் எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எந்தெந்த ஊர்களுக்கு தனியார் ரயில்? இந்த வழித்தங்களில் மும்பை – டெல்லி, சென்னை – டெல்லி, டெல்லி – ஹவுரா, ஷாலிமார் முதல் புனே, டெல்லி முதல் பாட்னா வரை தனியார் ரயில்கள் இயக்கப்படும். அதோடு இந்த ரயில்கள் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். மேலும் ரயில்வேயில் தனியார் துறையில் வேலை என்பது ரயில் சேவையை அளித்தல், நிதியளித்தல் கொள்முதல் செய்தல், பராமரிப்பு செய்தல் மட்டும் தான் என்றும் கூறியுள்ளது. இவ்வளவு வேகமா? மேலும் இவ்வாறு இயக்கப்படும் ஒவ்வொரு ரயில்களும் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடையதாக வடிவமைக்கப்படும். இதன் மூலம் பயணிகளின் பயண நேரம் வெகுவாக குறையும். மேலும் இந்த ரயில்களை இயக்கும் ஒட்டுனர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ரயில்வே துறையினராக மட்டுமே இருப்பர்.
இந்த தனியார்மயம் திட்டமானது இரு பகுதிகளாக செயல்படுத்தப்படும். முதலாவதாக தகுதி வாய்ந்த தனியார் நிறுவனங்களிட,ம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். இரண்டாவது அவர்கள் எப்படி வருவாயை பெருக்குவார்கள் என்பது குறித்தும் விசாரிக்கப்படும். மேலும் ஒரு குறிப்பிட்ட பாதையில் இயங்கும் தனியார் ரயில், அதே பாதையில் இயங்கும் மற்ற ரயில்களுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது கொடுக்கப்பட்டுள்ள request for qualification அறிக்கையில், தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் 151 புதிய ரயில்கள் 12 குழுவாகத் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இது இந்தியாவில் இருக்கும் அனைத்து ரயில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், இதேபோல் ஒவ்வொரு ரயிலிலும் 16 பெட்டிகள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான ரயில் பெட்டிகள் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 160 கிலோமீட்டர் வேகம் தனியார் முதலீட்டில் தயாரிக்கப்படும் 151 ரயில்களும் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் செல்லும் அளவிற்குத் திறன் வாய்ந்தாக இருக்க வேண்டும் என்று இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்தப் புதிய ரயில் இந்தியாவின் வேகமான ரயிலை விடவும் அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
151 ரயில்களை தனியார்கள் இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதிஅளித்துள்ளது இதில் தமிழகத்தின் பல்வேறு வழித்தடங்களில் 24 ரயில்களை தனியார்கள் இயக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால கட்டணங்கள் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. நாட்டில் உள்ள 109 வழித்தடங்களில் 151 நவீன ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டத்தில் தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பங்களை ரயில்வே அமைச்சகம் வரவேற்று உள்ளது.
35 கோடி மதிப்புள்ள இத்திட்டம் நிறைவேற்றப்பபட்டு 2023ம் ஆண்டு ஏப்ரலில் நாடு முழுவதும் தனியார் ரயில்கள் ஓடும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளது என்றும் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான கட்டணம் விமானம் போக்குவரத்துக்கு இணையாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழத்தில் பல்வேறு வழித்தடங்களில் 24 தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அவற்றின் சில விவரங்களை பார்ப்போம் 2023 ஏப்ரல் முதல் தனியார் ரயில்கள் ஓடும்.. விமானங்களுக்கு இணையான கட்டணம்.. ரயில்வே இரு வழிகளில் இயக்கப்பட உள்ள தனியார் ரயில்கள் சென்னை – மதுரை புதுச்சேரி – செகந்திராபாத் (வழி சென்னை) சென்னை – கோவை சென்னை திருநெல்வேலி திருச்சி – சென்னை சென்னை- கன்னியாகுமரி கன்னியா குமரி – எர்ணாகுளம் சென்னை – புதுடெல்லி, சென்னை – ஹவுரா சென்னை – புதுச்சேரி மங்களூர் – சென்னை (வாராந்திர ரயில்) சென்னை – மும்பை (வாரம் இருமுறை) கொச்சுவேலி – கவுஹாத்தி (வாரத்தில் மூன்று நாட்கள்) மேற்கண்ட ரயில்களை தனியார் இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய ரயில்வே, தனியார் மூலம், 151 நவீன ரயில்களை, 109 வழித்தடங்களில் இயக்க முடிவு செய்துள்ளது. இதற்கு தகுதியுள்ள நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று, இந்திய ரயில்வே வாரிய தலைவர், வி.கே.யாதவ், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: வரும், 2023 ஏப்ரல் முதல், தனியார் ரயில் போக்குவரத்தை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே தனியார் மயமாக்கப்படுவதாக கருத வேண்டாம். 2,800 ரயில் சேவையில், 5 சதவீதம் மட்டுமே தனியாருக்கு அளிக்கப்படும். தனியார்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தி, சேவையை மேற்கொள்ள வேண்டும். விமானம், சொகுசு பஸ் கட்டணங்களின் அடிப்படையில், தனியார் ரயில் கட்டணம் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும்.
மேலும், ரயில் தடம், ரயில் நிலையங்கள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பயன்படுத்த, தனியாரிடம் கட்டணம் வசூலிக்கப்படும். வருவாயில் குறிப்பிட்ட பங்கை, இந்திய ரயில்வேக்கு வழங்க வேண்டும். ரயில்களை குறித்த நேரத்தில் இயக்கும் விதியை கடைப்பிடிக்க வேண்டும். தவறினால், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தனியார் ரயில்கள் மூலம், குறைந்த செலவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில், மிகச் சிறப்பான சேவையை பயணியர் பெற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்தியாவில் தனியார் ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள, பம்பார்டியர் இந்தியா, அதானி போர்ட்ஸ், டாடா ரியாலிட்டி, பிரான்சின், அல்ஸ்தாம், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, டல்கோ, மெக்குயர் குழுமம் ஆகியவை ஆர்வமாக உள்ளன